உபதேசம் : 69
﷽ உபதேசம் : 69
29-02-2024 வியாழக்கிழமை
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக ஹுதைஃபா பின் அல்யமான் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது:
ஆடையின் ஓரம் தேய்வதைப் போன்று இஸ்லாம் தேய்வடையும். இறுதியில் நோன்பு, தொழுகை, (ஹஜ்ஜுக்கான) கிரியைகள், தர்மம் ஆகியவை என்னவென்றே தெரியாது.
வல்லமையயும் மாண்பும் மிக்க அல்லாஹ்வின் வேதம் ஓரிரவில் உயர்த்தப்பட்டுவிடும். ஆகவே அதிலிருந்து ஒரு வசனம் கூடப் புவியில் மிச்சமிருக்காது. மக்களுள் ஒரு குழுவினர் இருப்பார்கள்.
அவர்களுள் முதியோர்களும் பாட்டிகளும், லாயிலாஹ இல்லல்லாஹ் எனும் இந்தக் கலிமாவை எங்களின் மூதாதையர்கள் கூறுவதை நாங்கள் பார்த்திருக்கிறோம். எனவே நாங்களும் அதைக் கூறுகிறோம் என்று சொல்வார்கள்.
(கலிமாவை உளமாற மொழிவதால் அது அவர்களை நரகிலிருந்து காப்பாற்றும்!)
(இப்னுமாஜா:4039)
கருத்துகள்
கருத்துரையிடுக